வவுனியாவில் ஏற்பட்டுள்ள அபாய நிலை : பொதுமக்களுக்கு எச்சரிக்கை!!

1320


வவுனியா கந்தசாமி கோவில் வீதியிலுள்ள மிகவும் பழமைவாய்ந்த கிணறு ஒன்றிலிருந்து டெங்கு நுளம்புகள் பெருகியுள்ளதாக பூச்சியியலாளர்களினால் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.



இது ஒரு அபாய நிலை எனவும் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வவுனியா மேற்பார்வை பொது சுகாதாரப்பரிசோதகர் க. தியாகலிங்கம் இதனை தெரிவித்துள்ளார்.

இவ்வாறு டெங்கு நுளம்புகள் பெருக்கமடைவதை கட்டுப்படுத்துவது ஒரு சவாலாகும்.



கைவிடப்பட்ட கிணறுகள் தொடர்பாக உடனடியாக உங்கள் பகுதிகளிலுள்ள பொது சுகாதாரப்பரிசோதகர்கள் மற்றும் சுகாதார வைத்திய அதிகாரி, மலேரியா தடை இயக்கத்துடன் தொடர்பு கொண்டு கிணறுகளில் டெங்கு நுளம்பு பரவுவதை கட்டுப்படுத்துமாறு பொதுமக்களை கேட்டுக்கொள்ளவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.