எருமை மாட்டின் மீது நிர்வாணமாக சவாரி : பேஸ்புக்கால் வந்த வினை!!

300


 
பிலிப்பைன்சிற்கு சுற்றுலா சென்ற சுற்றுலாப் பயணிகள் அங்கிருந்த எருமை மாட்டின் மீது நிர்வாணமாக சவாரி செய்ததால், பொலிசார் அது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பிரித்தானியாவைச் சேர்ந்தவர் Liam Cox. இவர் கடந்த சில ஆண்டுகளாக பிலிப்பைன்சின் Siargao பகுதியில் இருக்கும் தீவிற்கு செல்வதற்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்து தருகிறார்.



அந்த வகையில் சமீபத்தில் அங்கு சுற்றுலா சென்ற போது, சுற்றுலா பயணிகள் மற்றும் இவர் அங்கிருக்கும் எருமை மாட்டின் மீது நிர்வாணமாக ஏறி சவாரி செய்துள்ளனர்.

இது தொடர்பான புகைப்படத்தை Liam Cox பேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளார். இதைக் கண்ட பிலிப்பைன்ஸ் பொலிசார், இது பிலிப்பைன்சின் கலாச்சாரம் மற்றும் பண்பாட்டை அவமானப்படுத்தியதற்கு சமம், என்று கூறி அவரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.



அப்போது Liam Cox அது தொடர்பான புகைப்படத்தை தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் இருந்து நீக்கியதுடன், இதற்கு மன்னிப்பும் கேட்டுள்ளார். இது குறித்து அவர் பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிடுகையில், சமீபத்தில் நாங்கள் சுற்றுலா சென்ற போது அங்கு சில புகைப்படங்களை எடுத்தோம், அதை பேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றம் செய்தது தவறு தான், அதுமட்டுமின்றி மாட்டின் மீது இது போன்று செய்திருக்க கூடாது. அதனால் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். என்னை மன்னித்து விடுங்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.



இது தொடர்பான புகைப்படத்தை அவர் நீக்கியிருந்தாலும், பிலிப்பைன்ஸ் பொலிசார் அது அதை நீக்குவதற்கு முன்பே அது தொடர்பான புகைப்படத்தை எடுத்து வைத்துள்ளனர். அதை ஆதரமாக வைத்து அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


பிலிப்பைன்சின் தேசிய விலங்கு எருமை மாடு என்பதால் அங்கிருக்கும் அதிகாரிகள் இது குறித்து உரிய நடவடிக்கை மேற்கொண்டு, அவருக்கு தண்டனை வழங்க வேண்டும் என்று கூறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.