வவுனியா நகரசபை தவிசாளர் தெரிவில் திடீர் மாற்றம்!!

456

வவுனியா நகரசபையின் நான்கு வருடங்களுக்குமான தவிசாளராக நா.சேனாதிராசா ஏகமனதாக தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

நேற்று (17.02.2018) காலை 9 மணியளவில் ஒன்றுகூடிய வவுனியா மாவட்ட தமிழரசுக் கட்சியின் குழுவினர் குறித்த முடிவை எடுத்துள்ளனர்.

கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற தமிழ் தேசிய கூட்டமைப்பின் கூட்டத்தில் எடுத்த முடிவின் பிரகாரம் நகரசபைத் தவிசாளர் பதவி முதல் இரண்டு வருடங்களுக்கு நா.சேனாதிராசாவுக்கும் அடுத்த இரண்டு வருடங்கள் த.பரதலிங்கத்துக்கும் ஒதுக்குவது என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

எனினும் சேனாதிராசாவுக்கே 4 வருடங்களும் ஒதுக்கபட வேண்டும் என்று பெரும்பான்மையான உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தமையால் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க முடிவு மாற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.