வவுனியா யங்ஸ்ரார் கழக உறுப்பினர்கள் மீது தாக்குதல் : இருவர் வைத்தியசாலையில்!!

288

 

வவுனியா வைரவபுளியங்குளத்தில் அமைந்துள்ள யங்ஸ்ரார் விளையாட்டு கழக உறுப்பினர்கள் மீது நேற்று (17.02.2018) இரவு 10 மணியளவில் கண்மூடித்தனமாக தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

இத் தாக்குதலில் காயமடைந்த இருவர் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில் ,

யங்ஸ்ரார் விளையாட்டு கழகத்தால் வருடம்தோரும் நடாத்தப்பட்டு வரும் கழகங்களுக்கிடையிலான மின்னொளியிலான உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியில் நேற்றையதினம் புதுக்குளம் ஈஸ்வரன் மற்றும் 786 கழகங்களுக்கிடையிலான ஆட்டம் வைரவபுளியங்குளம் சிறுவர் பூங்கா மைதானத்தில் இடம்பெற்றது.

இதன்போது 786 கழக உறுப்பினர்கள் வெற்றியடைந்துள்ளனர். இதன்போது 786 கழக உறுப்பினர்களும் ஆதரவளர்களும் யங்ஸ்ரார் கழகத்தினை முற்றுகையிட்டு அங்கிருந்த கழக உறுப்பினர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஆரம்ப கட்ட விசாணைகளிலிருந்து தெரியவருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இத் தாக்குதலில் காயமடைந்த இருவர் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் மேலதிக விசாரணைகள் இடம்பெற்றுவருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.