வவுனியா கூமாங்குளம் சித்தி விநாயகர் வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டி!!

419

 
வவுனியா கூமாங்குளம் சித்தி விநாயகர் வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டிகள் கூமாங்குளம் சுப்பர் சுப்பர் ஸ்டார் விளையாட்டு கழக மைதானத்தில் நேற்று (17.02.2018) மதியம் 1.30 மணியளவில் பாடசாலை முதல்வர் ச.பாலச்சந்திரன் தலைமையில் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன், சிறப்பு விருந்தினராக பிரதிக் கல்விப் பணிப்பாளர்களான
சு.அமிர்தலிங்கம், திருமதி தர்சினி தமிழழகன், திரு ரதீபானந், மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர் எஸ்.வாசன்,

கௌரவ விருந்தினர்களாக கூமாங்குளம் அஸ்திரம் இளைஞர் கழக தலைவர் நா.ஸ்ரீதரன், கிராம சேவையாளர் ஆர்.அமிர்தலிங்கம், வாழ்வின் எழுச்சி அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.கபிலன், சமூக ஆர்வலர் மா.கிரோஜன், அஸ்திரம் மக்கள் நற்பனி மன்ற செயலாளர் ந.கிருஷ்ணமூர்த்தி, பொது அமைப்புக்களின் பிரதி நிதிகள், பெற்றோர்கள், மாணவர்கள், பழையமாணவர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.