உடலில் எண்ணெய் பூசி வந்தவர்கள் செய்த செயல்!!

530

 
மட்டக்களப்பு – தொப்பிகல அரசாங்க காட்டில் சட்ட விரோதமாக வெட்டப்பட்டு கடத்தப்படவிருந்த ஒரு தொகை தேக்கு மரக்குற்றிகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

துவிச்சக்கரவண்டிகளில் கடத்தப்படவிருந்த குறித்த மரக்குற்றிகளை ஏறாவூர் பொலிஸார் நேற்று மாலை கைப்பற்றியுள்ளனர்.

உடலில் எண்ணெய் பூசிய நிலையில் துவிச்சக்கரவண்டிகளை தள்ளிக்கொண்டு வந்த ஆறுபேரும் தப்பியோடிவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது ஆறு துவிச்சக்கரவண்டிகளில் சுமார் ஆறு அடி நீளமுடைய 26 மரக்குற்றிகள் காணப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த நிலையில் சந்தேகநபர்களைக் கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.