வவுனியா தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப சங்கத்தினால் (VICTA) ஏற்பாடு செய்யப்பட்ட டெக் டோக் (Tech Talk) தகவல் தொழில்நுட்பத்துறையிலுள்ளவர்களுக்கான நிகழ்வு விக்டா அமைப்பின் தலைவர் திரு.ஷரண்யன் தலைமையில் வவுனியா பிரின்சஸ் ரோஸ் மண்டபத்தில் நேற்று (17.02.2018) மாலை 4.30 மணியளவில் இடம்பெற்றது.
விக்டா (VICTA) அமைப்பின் உப செயலாளர் விஜிதரனின் ஆக்கபூர்வமான ஆரம்ப உரையுடன் ஆரம்பான இந் நிகழ்வில் தொழில்நுட்பத்தில் ஆர்வலர்கள், வடிவமைப்பாளர்கள், புதிய வர்த்தகத்துறை விருத்திக்கான சேவைகளை வழங்குபவர்கள் மற்றும் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத்துடன் தொடர்பான திறமைகளுடையவர்கள் என பலரும் கலந்து சிறப்பித்திருந்தனர்.
தகவல் தொழில்நுட்பத்தின் தற்போதைய போக்கு மற்றும் தற்காலத்திற்கேற்ப தகவல் தொடர்பாடல் பற்றி இந்நிகழ்வில் கலந்துரையாடப்பட்டது.
வவுனியாவின் ஏற்பாடு செய்யப்பட்ட முதலாவது டெக் டோக் (Tech Talk) நிகழ்வு முழுமையாக தமிழில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.