நடிகர்களை நம்பி ஏமாந்து விடாதீர்கள் : நடிகர் சத்யராஜ் பரபரப்புப் பேச்சு!!

349
நடிகர்களை நம்பி ஒரு போதும் மக்கள் ஏமாந்து விடக்கூடாது என்று நடிகர் சத்யராஜ் பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சைதாப்பேட்டையில் திராவிட இயக்க தமிழர் பேரவையின் சமூகநீதி பாதுகாப்பு மாநாட்டின் நிறைவு விழா நடந்தது. இந்த கூட்டத்தில் மு.க.ஸ்டாலின், நடிகர் சத்யராஜ் உட்பட, அனைத்து கட்சி தலைவர்களும் கலந்து கொண்டனர்.

அப்போது சத்யராஜ் பேசுகையில், நடிகர்கள் அரசியலுக்கு வருவது அன்றாட செய்தியாகியுள்ளது. நடிகர்களுக்கு ஒரு பிரச்சனையும் இல்லை. அவர்களுக்கு தேவைக்கு அதிகமாகவே சொத்து உள்ளது. பிரபல நடிகர்கள் என்பதால் அவர்களுக்கு எல்லாம் தெரியும் என்று, அவர்களை ஒரு போதும் நம்பி விடாதீர்கள், அவ்வாறு நினைப்பது தவறு.

நடிகர்கள் அரசியலில் தோற்றால் அது பெரிய தோல்வி அல்ல, வெற்றி பெற்றால் உங்கள் நிலைமை என்னவாகும் என்று யோசியுங்கள். எனவே, நடிகர்கள் அரசியலில் தோற்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.