வவுனியாவில் பல்வேறு திருட்டுச்சம்பவங்களுடன் தொடர்புபட்ட நபர் பொலிஸாரினால் கைது!!

315

பல்வேறு திருட்டு, நகை கொள்ளை போன்ற சம்பவங்களுடன் தொடர்புபட்ட நபர் ஒருவரை இன்று (18.02.2018) கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வவுனியா, மடு, கனகராயன்குளம் போன்ற பகுதிகளில் இடம்பெற்ற திருட்டுச்சம்பவங்களுடன் தொடர்புபட்டுள்ளதாகத் தெரிவித்து வவுனியா பாரதிபுரம் பகுதியைச் சேர்ந்த 32 வயது நபரை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளதாகவும்

அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்னர் திருடப்பட்ட நகைகளை விற்பனை செய்த வியாபார நிலையங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் மேலதிக விசாரணைகளின் பின்னர் வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளதாகவும் பொலிசார் மேலும் தெரிவித்தனர்.