வவுனியாவில் வட்டுக்கோட்டையிலிருந்து முல்லைத்தீவு வரை நூல் அறிமுக விழா!!

460


 
சி.கா.செந்திவேல் எழுதிய வட்டுக்கோட்டையிலிருந்து முல்லைத்தீவு வரை நூல் அறிமுக விழா வவுனியா மன்னார் வீதியில் அமைந்துள்ள செஞ்சிலுவைச் சங்க கேட்போர் கூடத்தில் இன்று (18.02.2018) பிற்பகல் 4 மணியளவில் நி.பிரதீபன் தலைமையில் நடைபெற்றது.

இந் நிகழ்வில் வரவேற்புரையை யோ.கஜானன் வழங்கியதுடன் ஆய்வுரையை மருத்துவர் செல்வராஜா மதுரையின் மேலும் கருத்துரைகளை வவுனியா தேசியக் கல்லூரியின் சிரேஷ்ட விரிவுரையாளர் ந.பார்த்தீபன், இயன் மருத்துவர் வேலும் மயிலும் துவாரகன், பிரஷாந்தினி பிரதீபன் (புதிய சிந்தனை பெண்கள் அமைப்பு) ஆகியோர் நிகழ்த்தினார்கள்



இந் நிகழ்வில் சழூக ஆர்வளர்கள், பொதுமக்கள், பாடசாலை மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தனர்.