200 அடி பள்ளத்தில் பாய்ந்த கார் : கோர விபத்தில் சிக்கி இளைஞனும் யுவதியும் பலி!!

204


 
ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் லிந்துலை பெயார்வெல் பகுதியில் கார் ஒன்று வீதியை விட்டு விலகி 200 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர். குறித்த விபத்து நேற்று மாலை வேளையில் இடம்பெற்றுள்ளது.

மேல் கொத்மலை நீர்தேக்கத்திற்கு நீர்வழங்கும் ஆக்ரோயா ஆற்றில் பாய்ந்தே குறித்த கார் விபத்துக்குள்ளாகி உள்ளது.



இதில் உயிரிழந்தவர்கள் கம்பஹா பகுதியை சேர்ந்த பியூமிசாந்த் பிரசாதி பெரேரா (வயது 24) எனும் யுவதி எனவும், உயிரிழந்த இளைஞன் தொடர்பில் இதுவரை தகவல்கள் வெளியாகவில்லை எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

நுவரெலியாவிலிருந்து கம்பஹா நோக்கி சென்று கொண்டிருந்த காரே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த காரில் இளைஞரும், யுவதியும் மட்டுமே பயணித்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.



விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என்பதோடு, உயிரிழந்த இருவரின் சடலங்களும் லிந்துலை வைத்தியசாலையின் பிரேதை அறையில் வைக்கப்பட்டுள்ளது.



சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை லிந்துலை மற்றும் தலவாக்கலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.