வவுனியா மாணவி ஹரிஸ்ணவி பாலியல் வன்புணர்வின் பின் படுகொலை : 2 வருடங்கள் கடந்தும் நீதியில்லை!!

500


ஹரிஸ்ணவி பாலியல்படுகொலை இரண்டு வருடங்கள் கடந்துவிட்ட நிலையில் நீதியைப் பெற்றுத்தர ஊடகங்களினாலேயே முடியும் என தாயார் கவலையுடன் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்..



கடந்த 2016ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 16ம் திகதி எனது மகள் பாடசாலை மாணவியான ஹரிஸ்ணவி (14 வயதில்) வீட்டில் தனியாக இருந்தபோது ஈன இரக்கமற்ற பாவி ஒருவனால் பாலியல் வன்புணர்வின் பின்னர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் இடம்பெற்று கடந்த 16ஆம் திகதியுடன் இரண்டு ஆண்டுகள் கடந்துவிட்டது.

இரண்டு வருடங்கள் கடந்தவிட்ட நிலையிலும் இன்றுவரையில் எனது மகளுக்கு நீதியைப் பெற்றுக்கொள்ள முடியவில்லை. இதற்கு நீதியைப் பெற்றுத்தர ஊடகங்கள் முன்வரவேண்டும்.



இவ்விடயத்தில் இன்று வரை நீதியைப் பெற்றுக்கொள்ள முடியவில்லை இதற்கு ஒரு நீதியைப் பெற்றுத்தர ஊடகங்களாலேயே முடியும் எனவே வித்தியாவின் பாலியல் படுகொலையுடன் தொடர்புபட்ட குற்றவாளிகளுக்கு ஊடகங்களின் உதவியுடன் தண்டனை வழங்கப்பட்டுவிட்ட நிலையில் எனது மகளின் பாலியல் படுகொலையுடன் தொடர்புபட்ட நபருக்கு இன்னும் தண்டனை பெற்றுக்கொடுப்படவில்லை, நீதியும் நிலைநாட்டப்படவில்லை. இச்சம்பவமானது மக்களின் மனதிலிருந்து மெல்ல மெல்ல மறைந்து சென்று கொண்டிருக்கின்றது.



இவ்வாறான ஒரு சம்பவம் இனிமேல் எந்ததாய்க்கும் எமது நாட்டில் ஏற்பட்டுவிடக்கூடாது. வழங்கப்படும் தண்டனை ஒரு பாடமாக அமையவேண்டும் எனவும் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.


இப்பாலியல் படுகொலையுடன் தொடர்புபட்டுள்ளதாக ஹரிஸ்ணவியின் வீட்டிற்கு அருகில் வசித்து வந்த குடும்பஸ்தர் ஒருவர் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டு ஆறு மாதங்கள் வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டு பின்னர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது.

இவ்வழக்கானது வவுனியா நீதவான் நீதின்றில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது. இவ்வழக்கு சார்பாக பெண்கள் அமைப்பினரின் சட்டத்தரணி ஒருவரினால் முன்னெடுத்துச் செல்லப்படுகின்றது.


அடுத்த வழக்கு விசாரணை எதிர்வரும் மே மாதம் 21ஆம் திகதிக்கு தவணையிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.