வவுனியா பேருந்து நிலையத்தில் கஞ்சாவுடன் ஒருவர் கைது!!

325


 
வவுனியா பழைய பேருந்து நிலையத்தில் கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவரை வவுனியா பொலிஸார் நேற்று இரவு கைது செய்துள்ளனர்.

கிளிநொச்சியில் இருந்து கொழும்பு நோக்கி கஞ்சா கடத்தப்படுவதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போது குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் இருந்து 2 கிலோ 10 கிராம் கேரள கஞ்சா பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

கிளிநொச்சி, விவேகானந்தா நகர் கிழக்கு பகுதியைச் சேர்ந்த 33 வயது நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும், கைது செய்யப்பட்ட சந்தேகநபரை வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், இது தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.