மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் தாய் ஒருவர் நேற்று ஒரே பிரசவத்தில் மூன்று பிள்ளைகளை பெற்றெடுத்துள்ளார்.
களுவாஞ்சிக்குடி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள மகிழுர் என்ற கிராமத்தை சேர்ந்த தாய் ஒருவரே இந்த மூன்று பிள்ளைகளை பெற்றார்.
மூன்று பிள்ளைகளும் ஆரோக்கியமான நிலையில் இருப்பதாக மட்டு போதனா வைத்தியசாலையின் மகபேற்று மருத்துவ நிபுணர் கே. திருக்குமார் தெரிவித்தார்.