வவுனியாவில் லைபீரிய பிரஜைகள் இருவர் கைது..!

345

arrestபோலி டொலர்களை அச்சிட்ட லைபீரிய பிரஜைகள் இருவர் வவுனியாவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வவுனியா பொலிஸ் பிரிவில் வைத்தியசாலை சுற்றுவட்ட பகுதியில் டொலர்கள் அச்சிடப்பட்டுள்ளதாக வவுனியா வலய குற்ற விசாரணை பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

வவுனியா பகுதி நபர் ஒருவருடன் ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட நட்பினை அடுத்து வழங்கப்படும் இலங்கை ரூபாவிற்கு மூன்று மடங்கு டொலர் தரப்படும் என கூறி போலி டொலர்களை வழங்கியுள்ளனர்.

இது குறித்து வவுனியா வலய குற்ற விசாரணை பிரிவினருக்கு அறிவிக்கபட்டதை அடுத்து இரு லைபீரிய பிரஜைகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் இன்று வவுனியா நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்படவுள்ளனர்.