வவுனியாவில் நடைபெற்ற மாமனிதர் குமார் பொன்னம்பலத்தின் 14வது ஆண்டு நினைவு தினம்!!(படங்கள்)

281


மாமனிதர் குமார் பொன்னம்பலத்தின் 14 வது ஆண்டு நினைவு தின நிகழ்வு நேற்று மாலை 3 மணிக்கு வவுனியா நகர சபை மண்டபத்தில் சி.கஜேந்திரகுமார் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக சிவில் அமைப்பின் தலைவரும் மன்னார் மாவட்ட ஆயருமான அதி வணபிதா இராயப்பு ஜோசப் ஆண்டகையும் சிறப்பு அதிதியாக வவுனியா மாவட்ட அந்தணர் ஒன்றிய செயலாளர் நா.பிரபாகரக்குருக்களும் கலந்துகொண்டிருந்தனர்.



இதன் போது மாமனிதர் குமார் பொன்னம்பலத்திறகு அதிதிகள் மற்றும் பொது மககளும் மலரஞ்சலி செலுத்தியதுடன் சிறப்பு நிகழ்வாக “தமிழர்களும் அனைத்துலக சமூகமும்” என்ற தலைப்பில் அரசியல் ஆய்வாளரும் கவிஞருமான அ.நிலாந்தனின் நினைவு பேரூரையும் நடைபெற்றது.

அதனை தொடர்ந்து தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் வவுனியா மாவட்ட செயலாளரும் விழா ஒழுங்கிணைப்பாளருமான சி.கோபாலகிருஷ்ணன் நன்றியுரையுடன் நிகழ்வு நிறைவு பெற்றிருந்தது.



12 3 4 6 7 8 9 10