62 வயது மூதாட்டியை பலாத்காரம் செய்த 17 வயது சிறுவன்!!

316

Abuseமத்திய பிரதேசத்தில் 62 வயது மூதாட்டியை வீடு புகுந்து பாலியல் பலாத்காரம் செய்த 17 வயது சிறுவனை பொலிசார் கைது செய்துள்ளனர்.

மத்திய பிரேதச மாநிலம் ஹர்தா மாவட்டத்தில் உள்ள டோம்ரா கிராமத்தைச் சேர்ந்த 62 வயது மூதாட்டி ஒருவர் 17 வயது சிறுவன் மீது பாலியல் பலாத்கார புகார் தெரிவித்துள்ளார்.

மூதாட்டி அளித்த புகார் மனுவில் , எங்கள் கிராமத்தில் வசிக்கும் 17 வயது சிறுவன் ஒருவன் வீடு புகுந்து என்னை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டான். அதனால் அவன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

அவரது புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்த பொலிசார் 17 வயது சிறுவனை கைது செய்தனர்.