பளை பொலிஸ் பிரிவில் நான்கு இந்தியப் பிரஜைகள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
சுற்றுலா விசாவில் நாட்டிற்கு வந்த இவர்கள் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டமையினாலேயே கைதாகியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
நேற்று கைதான குறித்த சந்தேகநபர்கள் இன்று கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
பளை பொலிஸார் சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.