ரம்யாவுக்கு எதிராக தேர்தல் களத்தில் இறங்கும் மற்றுமொரு நடிகை!!

297

Ramyaஇந்தியாவின் கர்நாடகாவில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட நடிகை ரக்ஷிதா விருப்பம் தெரிவித்துள்ளார்.

கர்நாடகாவின் பிரபல நடிகையான குத்து ரம்யா கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற பாராளுமன்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தற்போது நடிகை ரம்யா மாண்டியா தொகுதி எம்பியாக இருந்து வருகிறார். எனவே வரவிருக்கும் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் மீண்டும் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளார்.

இம்முறை மீண்டும் நடிகை ரம்யா களம் இறக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே அவருக்கு போட்டியாக ஜனதா தளம் (எஸ்) கட்சி சார்பில் நடிகை ரக்ஷிதாவை களத்தில் இறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில் போட்டியிட நடிகை ரக்ஷயாவும் விருப்பம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து நடிகை ரக்ஷிதா கூறுகையில், மாண்டியா தொகுதியில் போட்டியிட இம்முறை வாய்ப்பு கிடைக்கும். மக்கள் என்னை நிச்சயம் வெற்றி பெற செய்வார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக கட்சி விதிக்கும் கட்டுபாடுகளுக்கு கட்டுப்படுவேன்.

நான் எந்த கட்சி சார்பில் போட்டியிட்டாலும் மக்கள் என்னை வெற்றி பெறச் செய்வர். நான் தற்போது ஜனதா தளம்(எஸ்) கட்சியில் உள்ளேன். அதே கட்சியிலேயே இந்த தொகுதியில் போட்டியிடுவேன். மாண்டியா தொகுதியை தவிர வேறு தொகுதியை கட்சி தந்தால் அதை நான் ஏற்கமாட்டேன். இது நான் திருமணமாகி மருமகளாக வந்த ஊர் என்று தெரிவித்துள்ளார்.