வவுனியாவில் அண்மையில் தயாரிக்கப்பட்ட நாளைய உலகம் குறும்பட வெளியீடு எதிர்வரம் 15 ஆம் திகதி வெளியிடப்படவுள்ளது. வவுனியா பொன் வீடியோ மீடியா கலையகத்தால் தயாரிக்கப்பட்ட இக் குறும்படம் வவுனியா சுத்தானந்த இந்து இளைஞர் சங்க மண்டபத்தில் கலாநிதி அகளங்கன் தலைமையில் வெளியிடப்படவுள்ளது.
கலை இலக்கிய நண்பர்கள் வட்டத்தின் வெளியீடாக காலை 10.30 மணிக்கு திரையிடல் இடம்பெறவுள்ளதுடன் கொல்லாதே குறும்படமும் வெளியிடப்பட்டவுள்ளது. சி.சுபாஸ்சிங்கத்தால் கதை, இயக்கம், தயாரிப்பு மேற்கொள்ளப்பட்டு வெளிவரும் இக் குறும்படத்தில் கபில், சிவநேசன், நாகராசா, சகீர், துஸ்யந் ஆகியோர் நடித்துள்ளனர்.
இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக வவுனியா பிரதேச செயலாளர் கா.உதயராசாவும் சிறப்பு விருந்தினராக சிரேஸ்ட ஊடகவியலாளர் அருணா செல்லத்துரையும் கலாநிதி கந்தையா ஸ்ரீகணேசனும் கௌரவ விருந்தினர்களாக கலாசார உத்தியோகத்தர்களான இ.நித்தியானந்தன் மற்றும் வீ. பிரதீபன் ஆகியோர் கல்து கொள்ளவுள்ளனர்.
இதேவேளை தமிழ் தாய் வாழ்த்தினை ஞா.வசந் பாடவுள்ளதுடன், வரவேற்புரையினை ந.கபிலநாத்தும் கருத்துப்பகிர்வினை பொ.மாணிக்கவாசகம், கே.வசந்தரூபன், எஸ்.வரதகுமார், ஆ.சுபாஸ்கரன். சி. கஜேந்திரன், றோ.கனிசியஸ், கே.ரூபகாந், க.கந்தவேள், மா.ஜெகன் ஆகியோர் வழங்கவுள்ளதுடன் ஏற்புரையினை சி.சுபாஸ்சிங்கமும் நன்றியுரையினை சி.நாகராசாவும் வழங்வுள்ளனர்.