ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் புதிய ஆணையாளராக ஜோர்தான் இளவரசர் : ஐ.நா பொதுச் சபை அங்கீகாரம்!!

299


H

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் புதிய நியமனத்தை பொதுசபை உறுப்பு நாடுகள் உறுதிப்படுத்தியுள்ளன.



இதன்படி மனித உரிமைகள் ஆணைக்குழுவின் புதிய ஆணையாளராக, ஜோர்தான் இளவரசர் சாயிட் அல் ஹுசைன் நியமிக்கப்படவுள்ளார். நேற்றையதினம் ஒன்று கூடி இருந்த ஐக்கிய நாடுகளின் பொது சபை உறுப்பு நாடுகள் இதற்கான அங்கீகாரத்தை வழங்கியுள்ளன.

இதன்படி எதிர்வரும் ஓகஸ்ட் மாதத்துடன் ஓய்வு பெறவுள்ள தற்போதைய ஆணையாளர் நவநீதம் பிள்ளையின் பதவியை ஹுசைன் பொறுப்பேற்கவுள்ளார்.



இந்த பதவியில் அமரும் முதல் ஆசியரும், இஸ்லாமியரும் இவராவார். அவரை ஐக்கிய நாடுகளின் பொது செயலாளர் பான் கீ மூனே பரிந்துரை செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.