மலேசிய விமானம் பற்றிய தகவல் இன்னும் சில தினங்களில்!!

377


Flight

காணாமல் போன மலேசிய விமானத்தை கண்டுபிடிக்கலாம் என்ற புதிய நம்பிக்கை பிரித்தானியாவின் செய்மதி நிறுவனம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.



239 பேருடன் கடந்த மார்ச் 8 ம் திகதி காணாமல் போன மலேசிய விமானம் வீழ்ந்த இடம் தொடர்பில் தம்மால் விரைவில் தகவல் தெரிவிக்க முடியும் என பிரித்தானியாவின் இன்மார்செட் செய்மதி நிறுவனம் அறிவித்துள்ளது.

விமானத்தை தேடும் பணிகள் தற்சமயம் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், இந்து சமூத்திர பகுதியில் மாத்திரம் தேடும் பணிகள் இடம்பெற்று வருகின்றன.



இந்த நிலையிலேயே விமானம் வீழ்ந்ததாக பெரும்பாலும் கருதப்படும் இடம் தொடர்பில் சரியாக தம்மால் சில தினங்களில் அறிவிக்க முடியும் என இன்மார்செட் செய்மதி நிறுவனம் அறிவித்துள்ளது.