வவுனியாவில் காற்றலை மின்சாரம் தயாரிக்கும் பாகங்களைத் தாங்கிய பார ஊர்திகள்!!(படங்கள்)

411

வவுனியா வெளிக்குளம் பிரதேசத்தில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் காற்றலை மின்சாரம் தயாரிக்கும் பாகங்களைத் தாங்கிய பார ஊர்திகள் தென்பட்டதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

பகல் வேளையில் வாகன நெரிசல் காரணமாக பிரயாணத்தை மேற்கொள்ள முடியாத நிலையில் வெளிக்குளம் பிரதேசத்தில் தங்கியிருந்த பார ஊர்திகள் பொலிஸ் பாதுகாப்புடன் இரவு வேளையில் பயணித்ததாக பிரதேச மக்கள் தெரிவித்தனர்.

இலங்கையில் முதல் முறையாக பளை பிரதேசத்தில் காற்றலை மின்சாரம் தயாரிக்கும் நிலையம் திறக்கப்படவுள்ளதாகவும் தொடர்ந்து வடக்கின் பல இடங்களிலும் இது போன்ற மின் நிலையங்கள் திறக்கப்படவுள்ளதாகவும் இத் திட்டத்தின் பொறியியலாளர் எமக்கு தெரிவித்தார்.

-படங்கள் சொதீப்-

1 6 7 8 9 10