92வது சர்வதேச கூட்டுறவு தின விழாவை முன்னிட்டு வவுனியா பூந்தோட்டம் மகாவித்தியாலயத்தில் பாடசாலை மாணவர்களுக்கு இடையிலான ஓவியக் கண்காட்சி பாடசாலை அதிபர் திரு.க தனபாலசிங்கம் தலைமையில் இன்று(19.07) நடைபெற்றது.
இவ் விழாவிற்கு சிறப்பு விருந்தினர்களாக வடமாகாண முதலமைச்சரின் செயலாளர் திரு.திருபாகரன் அவர்களும், கூட்டுறவு ஆணையாளர் திருமதி மதுமதி வசந்தகுமார் அவர்களும், சர்வதேச தொழிலாளர் அமைப்பின் பதிவாளர் திரு.பர்ஷான் அவர்கள் உட்பட இன்னும் பல முக்கியஸ்தர்கள் கலந்து சிறப்பித்தனர்.
இக் கண்காட்சிக்கு சர்வதேச தொழிலாளர் அமைப்பும் வடமாகாண கூட்டுறவு அபிவிருத்தி திணைக்களமும் அனுசரணை வழங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.