சுட்டு வீழ்த்தப்பட்ட விமானத்தில் மலேசிய தமிழ் நடிகை குடும்பத்துடன் பலி!!

313

FLight

சுட்டு வீழ்த்தப்பட்ட விமானத்தில், மலேசிய தமிழ் நடிகை குடும்பத்துடன் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நெதர்லாந்து தலைநகர் அம்ஸ்டர்டாமிலிருந்து மலேசிய தலைநகர் கோலாலம்பூர் நோக்கி 298 பேருடன் பறந்து கொண்டிருந்த மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம்– எம்.எச்.17 ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்களால் கடந்த 17ம் திகதி சுட்டு வீழ்த்தப்பட்டது.

இந்த விமானத்தில் பயணம் செய்தவர்களில் ஒருவர் மலேசிய தமிழ் நடிகை சுபா ஜெயா(38) என தெரிய வந்துள்ளது. இவர் ரிலேசன்ஷிப் ஸ்டேட்டஸ், டோகாக் ஆகிய மலேசிய சினிமா படங்களில் நடித்துள்ளார்.

மேலும், மலேசிய தொலைக்காட்சி ஒன்றில் வெளி வந்த சுகமான சுமைகள் உள்ளிட்ட பல்வேறு தொடர்களில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

போர்பிளே, சார்லிஸ் ஆன்டி, ஹங்க்ரி பார் ஹோப் ஆகிய நாடகங்களிலும் நடித்துள்ளார். பால் கோஸ் என்ற நெதர்லாந்து நாட்டு வாலிபரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியருக்கு காயிலா மாயா ஜெய் கோஸ் என்ற இரண்டு வயது மகள் உள்ளார்.

மரணத்தை தழுவுவதற்கு இரண்டு தினங்கள் முன்பாகத்தான் சுபா ஜெயா, தனது 38 ஆவது பிறந்த நாளை கொண்டாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.