இஷாந்த் ஷர்மாவின் அதிரடி பந்துவீச்சில் 95 ஓட்டங்களால் இந்திய அணி அபார வெற்றி!!

248


Eng

லோர்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற 2வது டெஸ்ட் போட்டியில் இந்தியா 95 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது.



இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி லண்டனில் உள்ள லோர்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது.

இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 295 ஓட்டங்கள் எடுத்தது. பின்னர் இங்கிலாந்து முதல் இன்னிங்ஸில் 319 ஓட்டங்கள் குவித்தது. இந்திய அணியின் புவனேஷ்வர் குமார் முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட்கள் வீழ்த்தி அசத்தினார்.



இந்நிலையில் தனது 2வது இன்னிங்ஸை தொடங்கிய இந்தியா சிறப்பாக விளையாடி 342 ஓட்டங்கள் குவித்தது. இதில் முரளி விஜய் அதிகபட்சமாக 95 ஓட்டங்கள் குவித்தார்.



இதன் மூலம் இங்கிலாந்து அணிக்கு 319 ஓட்டங்கள் இலக்காக வைக்கப்பட்டது. 4வது நாள் ஆட்டத்தில் 4 விக்கெட் இழப்பிற்கு 169 ஓட்டங்கள் குவித்து இங்கிலாந்து திணறி வந்தது.


இதைத் தொடர்ந்து கடைசி நாளான இன்று இங்கிலாந்து தொடர்ந்து துடுப்பெடுத்தாடியது. ரூட் பொறுமையாக இங்கிலாந்து அணியை இலக்கை நோக்கி கொண்டு வந்தார்.இவர் 66 ஓட்டங்கள் குவித்தார்.

திடீர் விஸ்வரூபம் எடுத்த இஷாந்த் ஷர்மா அடுத்தடுத்து விக்கெட்டுகளை வீழ்த்தி தள்ளினார். அவர் 74 ஓட்டங்களை மட்டும் கொடுத்து 7 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்தார். ஜடேஜா,சமி தலா ஒரு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.


இதன் மூலம் இந்திய அணி 95 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலையில் உள்ளது.