உயிர் மேல் ஆசை இருந்தால் மதம் மாறுங்கள் : மிரட்டும் ஐ.எஸ்.ஐ.எஸ்!!

395


Ter

ஈராக்கில் வாழும் கிறிஸ்துவர்கள் மதம் மாற வேண்டும் அல்லது வரி செலுத்தவேண்டும் என ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.



ஈராக்கில் வசிக்கும் கிறிஸ்துவர்கள் உயிர் வாழ ஆசைப்பட்டால் தங்களுக்கு ஜிஸியா எனும் வரி செலுத்த வேண்டும் அல்லது மதம் மாற வேண்டும், இல்லையேல் கொல்லப்படுவர் என ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் தலைவர் அபு பெக்கர் அல்பாக்தாதி அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது, கடந்த 19ம் திகதி முதல் அமுலுக்கு வந்த இந்த இந்த எச்சரிக்கை வரும் 26ம் திகதிவரை அமுலில் இருக்கும் என்று கெடு விதிக்கப்பட்டுள்ளது.



அதற்குள் கிறிஸ்தவர்கள் மதம் மாறவோ அல்லது ஜிஸியா வரியைச் செலுத்தவோ முடிவு செய்ய வேண்டும் என்றும் கெடு நாளுக்குப் பிறகு இதில் எந்த முடிவையும் தேர்வு செய்யவில்லையெனில், அவர்கள் எங்கள் வாளுக்கு இரையாக நேரிடும் எனவும் அவர் கூறியுள்ளார்.



இதற்கிடையே மொசூல் நகரில் இருந்த 5,000 கிறிஸ்துவர்களில் பலர் நாட்டை விட்டு வெளியேறி, தற்போது 200 பேர் மட்டுமே உள்ளதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.