ஸ்ரீபாத கல்லூரியில் ஏற்பட்ட மோதலில் 07 பேர் காயம்!!

302

Sripadha

பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பத்னை ஸ்ரீபாத தேசிய கல்வியற் கல்லூரியில் இரண்டு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் 07 பேர் காயமடைந்து கொட்டகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் நேற்று இடம் பெற்றுள்ளது. ஸ்ரீபாத தேசிய கல்வியற் கல்லூரியில் உணவகத்தில் வைத்து வாய்த் தர்க்கம் ஏற்பட்டு அது கைகலப்பாக மாறிவிட்டது என பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரனைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

எனவே இவ்வாறு கைகலப்பில் ஈடுபட்டவர்கள் கல்லூரியின் பயிலுனர் ஆசிரியர்கள் என பொலிஸார் மேலும் தெரிவித்தனர். காயமடைந்த 07 பயிலுனர் ஆசிரியர்கள் கொட்டகலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதோடு இவர்கள் குறித்து கவலையடைய தேவையில்லையென கொட்டகலை வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்

குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை திம்புள பத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.