வவுனியாவைச் சேர்ந்த சாரண மாணவன் ஜப்பான் பயணமாகவுள்ளார்!!

315

வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலய சாரண துருப்பைச் சேர்ந்த சாரணன் செல்வன் கணேசலிங்கம் யதுகனேஷ் இலங்கை சாரண சங்கத்தினால் வழங்கப்படும் புலமைப்பரிசில் பெற்று ” Inspire Japan – 2014 ” எனும் நிகழ்வில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தும் மூவர் கொண்ட குழாமில் இவ் மாணவனும் பயணமாகவுள்ளார்.

இவ் நிகழ்வு ஜூலை 29 ஆம் திகதி முதல் ஆகஸ்ட் 10 ஆம் திகதிவரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. இவ் இலங்கை குழாமில் குருநாகல் சென். அனீஸ் கல்லூரியைச் சேர்ந்த ஆர்.கே.வி. ரொசான் விசமித் அவர்களும் இவர்களுக்கு பொறுப்பான சாரண தலைவராக கோமாகம சாரண மாவட்டத்தைச் சேர்ந்த உதவி மாவட்ட ஆணையாளர் திரு லசந்த சஞ்சீவ விமலசிறி அவர்களும் பயணமாகவுள்ளனர்.

இதன் ஆரம்ப நிகழ்வான அறிமுக விழாவும், இலங்கை தேசிய கொடியினை கையளிக்கும் நிகழ்வு நேற்று கொழும்பு மாவட்ட சாரண தலைமை காரியாலயத்தில் நடைபெற்றது. இவ் நிகழ்வுடன் கொரிய சாரண சங்கத்தின் 4 ஆவது சர்வதேச அணி ஜம்பொறியில் கலந்து கொள்ளும் சாரணர்களின் நிகழ்வும் நடைபெற்றது.

இதன் சிறப்பு விருந்தினர்களாக ஜப்பான் மற்றும் கொரியா நாடுகளின் இலங்கைக்கான தூதுவராலயங்களின் செயலாளர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

இவ் நிகழ்வில் இலங்கை சாரண சங்கத்தின் பிரதம ஆணையாளர் பேராசிரியர் நிமால் டி சில்வா, பிரதி பிரதம ஆணையாளர் திரு சிரசாலி, சர்வதேச ஆணையாளர் திரு ஜனபிரித் பெர்னாண்டோ, தேசிய பயிற்சி ஆணையாளர் திரு சரத் கொடகந்தாராச்சி, சாரண சங்கத்தின் பொருளாளர் திரு கமலநாத் ஜினதாச, வட கிழக்கிற்கான விசேட ஆணையாளர் திரு எம்.எப்.எஸ். முகீட் இவர்களுடன் மாவட்ட சாரண பிரதிநிதிகள், பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
ஊடக மற்றும் பொதுத் தொடர்புகள் பிரிவு,
வவுனியா மாவட்ட சாரணர் சங்கம்.

1 2 3 4 5 6 7 8 9