செருப்பால் உயிர் பிழைத்த பெண்மணி!!

305

Lady

பிரித்தானியாவில் பெண் ஒருவர் ரப்பர் செருப்பு அணிந்திருந்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர்பிழைத்துள்ளார்.

பிரித்தானியாவின் சிப்பன்ஹெம் நகரை சேர்ந்த ஜேனிபர் (49) தனது வீட்டில் தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்த போது திடீரென்று மின்னல் தாக்கி அவர் வீட்டில் தீ பிடித்துள்ளது. இதனால் மின்சாரம், தொலைபேசி, இணையதளம் என அனைத்தும் துண்டிக்கப்பட்டுள்ளது.

ஆனால் அவருக்கு மட்டும் தலையில் யாரோ கொட்டியது போலவே தோன்றியுள்ளது. ஏனென்றால் இவர் அணிந்திருந்த ரப்பர் செருப்பு, மின்சாரம் இவர் மீது தாக்க விடாமல் காப்பாற்றியுள்ளது.

இதுகுறித்து ஜேனிபர் கூறுகையில் சத்தம் குண்டு வெடிப்பது போல இருந்ததாகவும், மின்னல் தொலைபேசியில் தாக்கியதாகவும் தெரிவித்துள்ளார்.