வவுனியா முத்தையா மண்டபத்தில் நேற்று (27.07) 92ஆவது சர்வதேச கூட்டுறவாளர் தினவிழா வவுனியா கூட்டுறவு சபைத் தலைவர் திரு.R.சுப்பிரமணியம் தலைமையில் நடைபெற்றது.
இவ் விழாவிற்கு சிறப்பு விருந்தினர்களாக கூட்டுறவு ஆணையாளர் அவர்களும், வடமாகாண கூட்டுறவு ஆணையாளர் திருமதி மதுமதி வசந்தகுமார் உட்பட பல முக்கியஸ்தர்களும் பிரதேச மக்களும் கலந்து சிறப்பித்தனர்.
மேலும் வவுனியா கூட்டுறவு சபையால் பாடசாலை மட்டத்தில் நடாத்தப்பட்ட போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசில்களும் வழங்கப்பட்டன.