வவுனியாவில் இன்று (29.07) விசேட ரமழான் பெருநாள் நிகழ்வுகளை இஸ்லாமியர்கள் அனுஸ்டித்தனர். வவுனியா மாவட்ட தவ்ஜீத் ஜமாத்தின் தலைமையில் நபிபெருமானின் வழியில் பட்டைக்காடு வயல்வெளி மைதானத்தில் இன்று காலை விசேட தொழுகைகள் இடம்பெற்றிருந்தது.
இதன்போது ஆண்கள் பெண்கள் என அதிகளவானோர் விசேட தொழுகையில் கலந்துகொண்டிருந்தனர். இதேவேளை வவுனியாவில் உள்ள பள்ளிவாசல்களிலும் விசேட வழிபாடுகள் இடம்பெற்றிருந்தன.