சிறுமி ஒருவரை காதலிப்பதாக துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய இளைஞன் விளக்கமறியலில்!!

314

Abuse

யாழ்.பருத்தித்துறை பகுதியில் உள்ள சிறுமி ஒருவரை காதலிப்பதாக துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய குற்றச்சாட்டில் நாகர்கோவில் பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டு நேற்றைய தினம் சிறுவர் நீதிமன்றில் முறபடுத்தப்பட்ட நிலையில் சந்தேக நபரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை பொலிஸார் தகவல் தருகையில், பருத்தித்துறை பகுதியை சேர்ந்த சிறுமி ஒருவரை காதலிப்பதாக கூறி நாகர்கோவில் பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் பல தடவைகள் சிறுமியை துஷ்பிரயோகத்திற்குள்ளாக்கியிருக்கின்றார்.

இந்நிலையில் காதலிப்பதாக கூறிய இளைஞர் பின்னர் ஏமாற்ற நினைத்த நிலையில் சிறுமி தற்கொலைக்கு முயற்சித்ததாக பெற்றோர் பொலிஸாருக்கு முறைப்பாடு கொடுத்துள்ளனர்.

இதனடிப்படையில் குறித்த இளைஞரை கைது செய்து யாழ்.சிறுவர் நீதவான் நீதிமன்றில், நேற்றைய தினம் முற்படுத்திய நிலையில் குறித்த இளைஞரை விளக்கமறியில் வைக்குமாறு நீதவான் உத்தரவு பிப்பித்திருப்பதாக பொலிஸார் மேலும் தெரிவித்திருக்கின்றனர்.