மதுபானம் விஷமானதில் ஒருவர் பலி : சேர்ந்து குடித்த இருவர் கைது!!

294

Dead

எல்பிடிய – இதல்கந்த – கடுபொல்வத்த பிரதேசத்தில் மதுபானம் விஷமானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று இரவு மேலும் இருவருடன் மதுபானம் அருந்திய இவர் திடீர் சுகயீனமுற்ற நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோது, உயிரிழந்துள்ளார்.

இஹல எல்பிடிய பகுதியைச் சேர்ந்த 30 வயதான ஒருவரே இவ்வாறு பலியாகியுள்ளார். மேலும் அவருடன் இணைந்து மது அருந்திய இருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளதோடு, எல்பிடிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.