வவுனியா கோவிற்குளம் பகுதியுள்ள வீட்டு வளர்ப்பு நாய்கள் மர்மமான முறையில் இறப்பு : அச்சத்தில் மக்கள்!!

314


DOg

வவுனியாவில் அண்மைக்காலமாக நாய்கள் மர்மமான முறையில் இறப்பது மக்களை அச்சத்தில் மூழ்கடிததுள்ளது. கோவிற்குளம் சிவன்கோவிலுக்கு முன்னாள் உள்ள வீதியுள்ள வளர்ப்பு நாய்களே அண்மை நாட்களில் மர்மமான முறையில் இறந்து வருகின்றன.



இது தொடர்பாக அவ் வீதியில் உள்ள ஒருவர் கருத்து தெரிவிக்கையில் கடந்த ஆடி அமாவாசை அன்று தங்கள் வீட்டின் முன் பக்கத்தில் தமது வீட்ட நாய் இறந்து கிடந்ததாகவும் இந் நாய் எடுத்த வாந்தியிலிருந்து நச்சு தன்மையான வாடை வந்ததாகவும் அவர் கூறுகின்றார்.

இத் தினத்திலிருந்து இன்று (30.07) வரை அவ் வீதியுள்ள பல வளர்ப்பு நாய்கள் இவ்வாறான முறையில் இறந்து கிடப்பதை அவதானிக்க முடிகின்றது. தொடர்ச்சியாக இவ்வாறான வீட்டு வளர்ப்பு நாய்கள் இறந்து வருவதையடுத்து அப்பகுதி மக்கள் அச்சம் கொண்டு பல கோணங்களில் சிந்தித்து வருகின்றார்கள்.



திருட்டு சம்பவத்தை மேற்கொள்வதற்காக திருடர்கள் இவ்வாறான சம்பவத்தை செய்திருக்கலாம் என்றும் அல்லது வேறு காரணங்களுக்காகவும் செய்திருக்கலாம் என்றும் அச்சத்துடன் கருத்து தெரிவிகின்றார்கள்.