வவுனியாவில் காணாமல் போன சிறுவன் யாழ்ப்பாணத்தில் கண்டுபிடிப்பு!!

355

Missing

வவுனியா பேரூந்து நிலையத்தில் காணாமல் போன சிறுவன் இன்று புதன்கிழமை யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் இளைஞன் ஒருவரால் ஒப்படைக்கப்பட்டுள்ளான்.

வவுனியாவைச் சேர்ந்த 8 வயதான பெர்ணான்டோ சாரங்கன் என்ற சிறுவனே காணாமல் போயிருந்த நிலையில் இன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளான்.

திருகோணமலையிலுள்ள உறவினர் வீடொன்றிற்குச் சென்று திரும்பி வரும்போது நேற்று வவுனியா பேரூந்து நிலையத்தில் வைத்து சிறுவன் காணாமல் போனதாக உறவினர்களால் வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் இன்று இளைஞன் ஒருவரால் குறித்த சிறுவன் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளான்.
இச்சம்பவம் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்ட யாழ்ப்பாணம் பொலிஸார் சிறுவனின் பெற்றோரை யாழ்.பொலிஸ் நிலையத்திற்கு வருமாறு தெரிவித்துள்ளனர்.