20 வயதுடைய பிரித்தானிய யுவதி மீது பாலியல் வல்லுறவு : சந்தேக நபர் கைது!!

294

Abuse

பிரித்தானிய யுவதியொருவர் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்ட நிலையில் அம்பாறை வைத்தியசாலையில் நேற்று இரவு அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

20 வயதுடைய பிரித்தானிய யுவதி பொத்துவில், உல்லை அறுகம்பை பிரதேசத்தில் வைத்து வல்லுறவுக்குட்படுத்தப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், குறித்த யுவதி உடலில் காயங்களுடன் நேற்று பிற்பகல் 3.50 மணியளவில் பொத்துவில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக இரவு 7.30 மணியளவில் அம்பாறை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார் என பொத்துவில் பொலிஸார் குறிப்பிட்டனர்.

இச்சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொத்துவில் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.