சமூகவலைத்தள பாவனையில் முன்னணியில் திகழும் பேஸ்புக் ஆனது மொபைல் சாதனங்களுக்கான அப்பிளிக்கேஷனை வெளியிட்டுள்ளமை யாவரும் அறிந்ததே.
தற்போது இந்த அப்பிளிக்கேஷனில் இருந்து குறுஞ்செய்தி அனுப்பும் வசதியை நீக்கவுள்ளதாக பேஸ்புக் நிறுவனம் அறிவித்துள்ளது.
குறுஞ்செய்திகளை அனுப்புவதற்காக மட்டும் அந்நிறுவனத்தினால் Facebook Messenger எனும் புதிய அப்பிளிக்கேஷன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இதன்காரணமாகவே பேஸ்புக் மொபைல் அப்பிளிக்கேஷனில் இருந்து குறித்த வசதியை நீக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.