ரயில் முன் பாய்ந்து இளைஞர் தற்கொலை!!

331

Train

தெஹிவளை பிரதேசத்தில் ரயில் முன் பாய்ந்து ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். அளுத்கமவில் இருந்து மருதானை நோக்கி பயணித்த ரயிலில் மோதியே இவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

கல்கிஸ்ஸை – படோவிட பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயதான ஒருவரே இவ்வாறு பலியாகியுள்ளார். தற்கொலைக்கான காரணம் இதுவரை தெரியவராத நிலையில், தெஹிவளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.