நெல்சன் மண்டேலாவை அவமதித்த நிர்வாணப் பெண்!!

349


தென்னாபிரிக்க தலைநகர் ஜோகனஸ்பெர்க்கில் முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலாவின் பிரமாண்ட உருவச்சிலை அமைக்கப்பட்டுள்ளது. அண்மையில் இந்த சிலையை பெண்ணொருவர் பார்வையிட்டு தனது வீர வணகக்த்தை செலுத்தினார்.

எனினும் யாருமே எதிர்பாராத வகையில் தனது ஆடைகளை எல்லாம் களைந்து தூர வீசி விட்டு, நிர்வாண கோலமாக நடந்து சென்று சிலை அமைக்கப்பட்டிருந்த பீடத்தின் மீது ஏறிய அந்த பெண் மண்டேலாவின் சிலையை கட்டியணைத்தவாறு சில நிமிடங்கள் நின்றார்.



இந்த வினோத காட்சியை கண்டு அவ்வழியே வாகனங்களில் சென்ற ஆண்களும், பெண்களும் முகம் சுழித்தனர். அருகாமையில் இருக்கும் ஒரு உணவு விடுதியின் ஊழியர்கள் இதைக் கண்டு பதறிப் போயினர்.

உடனடியாக சிலை அருகே ஓடி வந்த அவர்கள் கீழே கிடந்த ஆடைகளை எடுத்து அவரிடம் தந்து, அவற்றை அணிந்துக் கொண்டு அந்த இடத்தை விட்டு வெளியுமாறு வலியுறுத்தினர். எதிர்ப்பு ஏதும் தெரிவிக்காமல் அமைதியாக ஆடைகளை உடுத்திக் கொண்ட அந்த பெண் அவ்விடத்தை விட்டு வெளியேறியுள்ளார்.



நிற வெறிக்கு எதிராகவும், ஆபிரிக்க மக்களின் விடுதலைக்காகவும் போராடிய நெல்சன் மண்டேலா கடந்த டிசம்பர் மாதம் மரணமடைந்தார். அவரின் நினைவாக பிரமாண்ட உருவச்சிலை அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



N1 N2