பொலிஸிடம் செருப்பை காட்டி மிரட்டிய பெண் எம்.எல்.ஏ!!

361

ஜார்கண்ட் மாநிலத்தில் லொறி விபத்தினால் ஏற்பட்ட மோதலில் காவல்துறை கண்காணிப்பாளர் மீது பெண் எம்.எல்.ஏ செருப்பை காட்டி மிரட்டியுள்ளார்.

தியோகர் என்னும் இடத்தில் உள்ள சிவன் கோவிலுக்கு சென்றுவிட்டு பீகார் மாநிலம் ரோடர்ஸ் மாவட்டத்தைச் சேர்ந்த பொதுமக்கள் பேருந்து ஒன்றில் திரும்பிக்கொண்டிருந்தனர்.

அப்போது அவுரங்காபாத் அருகில் பேருந்து வந்தபோது, ஓட்டுனர் ஒய்வு எடுப்பதற்காக சாலையோரத்தில் பேருந்தை நிறுத்தியுள்ளார்.
இந்நிலையில், அங்கு அதிவேகமாக வந்த லொறி ஒன்று சாலையோரம் தூங்கிக்கொண்டிருந்த பத்கர்கள் மீது ஏறியதோடு, பேருந்து மீதும் மோதிய விபத்தில் பெண் உள்பட 18 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த சம்பவத்தை அறிந்த அப்பகுதியின் சுயேட்சை பெண் எம்.எல்.ஏ. ஜோதி சம்பவ இடத்திற்கு விரைந்து, அங்கு போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சந்தித்துள்ளார்.

அப்போது போராட்டக்காரர்களுக்கும் பொலிசாருக்கும் ஏற்பட்ட மோதலில் போராட்டக்காரர்களுடன் சேர்ந்து எம்.எல்.ஏ. ஜோதியும் வாக்குவாதம் செய்தபோது ஆவேசப்பட்ட ஜோதி, காவல்துறை கண்காணிப்பாளரை நோக்கி தனது செருப்பை காட்டி திட்டியதால் அந்த இடத்தில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட ஆட்சியர் நவீன், போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சமாதானப்படுத்தியுள்ளார்.

M1 M2