ரயில் சாரதிகளின் சாதுர்யத்தால் பாரிய ரயில் விபத்து தவிர்க்கப்பட்டது!!

425

Train

இன்று பகல் இரு ரயில்கள் நேருக்குநேர் மோதவிருந்த பாரிய விபத்து ஒன்று தவிர்க்கப்பட்டுள்ளது. கொழும்பில் இருந்து திருகோணமலைக்குச் சென்ற ரயில் மற்றும் திருகோணமலையில் இருந்து கொழும்பு நோக்கிச் வந்த ரயிலுமே இவ்வாறு விபத்தைச் சந்திக்கவிருந்தன.

சமிக்ஞை தவறால் திருகோணமலை – கல்ஓய ரயில் பாதையில் இந்த இரு ரயில்களும் பயணித்தது தெரியவந்துள்ளது. இந்தப் பாதையிலான ரயில் சமிக்ஞை நிர்வாகம் அனுராதபுரம் ரயில் நிலையத்தில் இருந்து மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு ரயில்கள் ஒரே பாதையில் பயணிப்பதை அறிந்தததும் திருகோணமலையில் இருந்து கொழும்பு வந்த ரயில் 142 வது கட்டையிலும், கொழும்பில் இருந்து திருகோணமலை சென்ற ரயில் 150வது கட்டையிலும் நிறுத்தப்பட்டன. இதனால் பாரிய விபத்து தவிர்க்கப்பட்டது.