சமரபாகு சீனா உதயகுமாரின் எட்டாவது தொகுதியான “சித்திரா ரீச்சர்“ சிறுகதைத் தொகுதி வெளியீட்டு விழா!!

422


சமரபாகு சீனா உதயகுமாரின் எட்டாவது தொகுதியான “சித்திரா ரீச்சர்“ சிறுகதைத் தொகுதி வெளியீட்டு விழா வல்வெட்டித்துறை சமரபாகு கிராமத்தில் 29.07.2014 அன்று செவ்வாய்க்கிழமை சிறப்பாக நடைபெற்றது.

விழா பிற்பகல் 3.16 மணிக்கு ஆரம்பமாகி இருந்தது. வல்வை ந.அனந்தராஜ் அவர்கள் தலைமை தாங்கியிருந்தார். ஒரு நிமிட மௌன இறைவணக்கம் இடம்பெற்று, ரவிசிங் யதுர்க்கா, ரவிசிங் யதுர்சனா இவர்களின் தேவார இன்னிசையோடு விழா ஆரம்பமானது.



வாழ்த்துரையினை பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் அவர்கள் நிகழ்த்த, வளர்ந்துவரும் இளங் கவிஞர் முல்லைத்தீபன் வாழ்த்துக்கவி படித்தார். வெளியீட்டுரையினை அரச பொதுச்சேவை ஆணைக்குழுத் தலைவர் உடுவை தில்லை நடராஜா அவர்கள் நிகழ்த்த நூலிற்கான நயப்புரையினை கோகிலா மகேந்தரன் அவர்கள் நிகழ்த்தினார்.

அல்வாயுர் கவிஞர் கே.ஆர்.திருத்துவராஜா அவர்கள் “கவி விநோதன்“ எனும் பட்டம் வழங்கி பொன்னாடை போர்த்தி, வாழ்த்துப்பா வழங்கப்பட்டும் கௌரவிக்கப்பட்டார். தமிழ் பண்பலையின் பொக்கிசம் நிகழ்ச்சித் தொகுப்பாளர் ரீ.எஸ்.முகுந்தன் சிறப்புரை நிகழ்த்தினார். மண்டபம் நிறைந்த மக்கள் மத்தியில் “சிறுகதைத் தொகுதி வெளியீட்டு விழா நடைபெற்றது. இத்தனை சனங்களா..? என்று எல்லோரும் வியக்கும்படி விழா சிறப்பாக நடைபெற்றது.



30 31 32 33