வவுனியாவில் மிகச் சிறப்பாக நடைபெற்ற முத்தமிழ் சங்கம் நிகழ்வு!! (படங்கள்)

312

வவுனியாவில் சர்வதேச இந்து இளைஞர் பேரவையின் ஏற்பாட்டில் முத்தமிழ் சங்கமம் நிகழ்வு நேற்று (16.08) சிறப்பாக நடைபெற்றது. வவுனியா, சிந்தாமணிப் பிள்ளையார் ஆலய கலாசார மண்டபத்தில் சர்வதேச இந்து இளைஞர் பேரவையின் தலைவர் சிவ.கஜேந்திரகுமார் தலைமையில் நேற்று சனிக்கிழமை மாலை 2 மணிக்கு ஆரம்பமாகி நடைபெற்றது.

கடந்த காலங்களில் கல்வி மற்றும் சமய வளர்ச்சிக்காக சமூக மட்டத்தில் பல்வேறு உதவித் திட்டங்களை மேற்கொண்டு வந்த சர்வதேச இந்து இளைஞர் பேரவை கடந்த மாதம் லண்டனில் முத்தழிழ் சங்கம் என்னும் நிகழ்வினை நடத்தி மூத்தோர்களையும் கௌரவித்திருந்தது.

அதன் தொடர்ச்சியாக இலங்கையிலும் இந் நிகழ்வு இன்று வவுனியாவில் நடைபெற்றது. இந் நிகழ்வில் இயல், இசை, நாடகம் என்னும் முத்தமிழையும் வெளிப்படுத்தி நாட்டிய, நாடக, பட்டிமண்டபம் என்னும் பல வகையான கலைநிகழ்வுகள் இடம்பெறுகின்றன.

இந் நிகழ்வின் போது சமஸ்கிருத பண்டிதர் சிவஸ்ரீ கி.சதாசிவக்குருக்கள், வவுனியா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியகலாநிதி கு.அகிலேந்திரன், யாழ் பல்கலைக்கழக இசைத்துறைத் தலைவர் தர்சன், மன்னார் பிரதேசத்தைச் சேர்ந்த வைத்தியகலாநிதி மு.கதிர்காமநாதன், எழுத்தாளர் மேழிக்குமரன், முல்லைத்தீவு மாவட்ட நாடக கலைஞர் அண்ணாவியர் சி.நவரத்தினம் ஆகியோரின் துறைசார் சேவைகளையும் சமூக சேவையையும் பாராட்டி விருதுகளும் வழங்கப்பட்டன. இந்நிகழ்வு சிறப்புற இடம்பெறுவதற்கு முழுமையான ஆதரவினை நல்கிய லண்டனை சேர்ந்த திரு .அகிலன், திருமதி dr. அகிலன் தம்பதிகள் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டனர்

இந் நிகழ்வில் சிவபூமி அறக்கட்டளை நிலைய தலைவர் கலாநிதி ஆறு.திருமுருகன், பேராதனை பல்கலைக்கழக தமிழ் துறைத் தலைவர் பேராசிரியர் வ.மகேஸ்வரன், யாழ் பல்கலைக் கழகத்தில் தமிழ் துறைத் தலைவர் கி.விசாகரூபன், வவுனியா, நெடுங்கேணி, செட்டிகுளம் பிரதேச செயலாளர்கள், சர்வதேச இந்து இளைஞர் பேரவையின் ஸ்தாபகர் லண்டன் வாழ் சிவ.கணேஸ்குமார் தமிழ்மணி அகளங்கன், தமிழருவி சிவகுமாரன் வவுனியா மாவட்ட அந்தணர் ஒன்றிய செயலாளர் நா.பிரபாகர குருக்கள் உள்ளிட்ட பெருமளவானோர் கலந்து கொண்டனர்.

1 2 3 4