வவுனியாவில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து சிறுவன் பலி!!

305

Suvar

வவுனியா கொந்தக்காரன் குளத்தில் வீட்டு சுவர் இடிந்து வீழ்ந்ததில் சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளார்.

அரச சார்பற்ற நிறுவனமொன்றினால் மீள்குடியேற்ற கிராம மக்களுக்கு அமைத்து கொடுக்கப்பட்ட வீடொன்றில் நேற்று (18.08) இரவு 07.00 மணியளவில் இடம்பெற்ற அச்சம்பவத்தில் எஸ்.சாரங்கன் என்ற 4 வயது சிறுவனே பலியாகியுள்ளார்.

அண்மையில் அமைக்கப்பட்ட இவ் வீட்டிற்குள், மோட்டார் சைக்கிள் ஒன்றினை எடுத்து வைக்க முற்பட்ட வேளை, வீட்டின் முன் கதவு பகுதி மோட்டார் சைக்கிளில் மெதுவாக முட்டிக்கொள்ளவே இச் சுவர் அருகில் நின்ற சிறுவனுக்கு மேல் வீழ்ந்துள்ளது.

இதனையடுத்து சிறுவனை வவுனியா பொது வைத்தியசாலைக்கு எடுத்து சென்ற போதிலும் அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.