உடல் முழுவதும் 1 லட்சம் தேனீக்களை ஏந்தி சாதனை படைத்த இளைஞன்!!

334

Honey Bee

தமிழ்நாடு, குமரி மாவட்டத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் தனது முகம் மற்றும் உடலில் 1 லட்சம் தேனீக்களை ஏந்தி சாதனை படைத்துள்ளார்.

குமரி மாவட்டம் ஆசாரிபள்ளம் அருகே உள்ள சடையால்புதூரை சேர்ந்தவர் பிளவேந்திரராஜ். இவர் தேனீக்கள் வளர்த்து தேன் உற்பத்தி செய்யும் தொழில் செய்து வருகிறார். இவரது மகன் ராஜேஷ் (24).

ஐடிஐ முடித்துவிட்டு பிளம்பிங் வேலை பார்க்கும் ராஜேஷிற்கு தனது சிறு வயது முதல் தேனீக்களை உடலெங்கும் விட்டு சாதனை செய்ய வேண்டும் என்ற ஆசை இருந்துள்ளது.

இந்நிலையில் சடையால்புதூரில் உள்ள சடையால்குளம் அருகே ஒரு முறிந்த தென்னையில் தேனீக்கள் இருப்பதாக பிளவேந்திரராசுக்கு தகவல் வந்துள்ளது.

இதனையடுத்து ராஜேஷுடன் சென்றிருந்த அவரது நண்பர்களும், தேனீக்களை பிடித்து உடலில் விட்டதுடன் ராஜேஷின் சாதனைக்கு ஆலோசனை வழங்கியுள்ளனர்.

இதன்பின் தென்னையில் இருந்து பிடித்த சுமார் 1 லட்சம் தேனீக்களை ராஜேஷ் உடலில் விட்டுள்ளார்.

அந்த தேனீக்கள் ராஜேஷின் முகம் மற்றும் மார்பு பகுதிகளில் அமர்ந்துள்ளன. சுமார் 1 மணிநேரம் அவர் அப்படியே இருந்துள்ளார். பிறகு இந்த தேனீக்கள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளன.