வவுனியாவில் கஞ்சாவுடன் இருவர் கைது!!

519

A6

வவுனியாவில் கஞ்சா வைத்திருந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்துள்ளனர்.

வவுனியா நகர்ப் பகுதியில் 2 கிராம் கஞ்சாவுடன் நடமாடிய பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த இருவரையே கைது செய்துள்ளதாகவும் அவர்களிடம் இருந்த 2 கிராம் கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாகவும் அவர்களை இன்று வெள்ளிக்கிழமை வவுனியா நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் பொலிசார் மேலும் தெரிவித்தனர்.

இதேவேளை, கஞ்சாவுடன் கைது செய்யப்பட்ட இருவரும் புதிதாக சிங்கள குடியேற்றம் இடம்பெற்று வருகின்ற கலாபோவஸ்வெவ பகுதியைச் சேர்ந்தவர்கள் என தெரியவருகிறது.