சிம்புவை புண்படுத்த விரும்பவில்லை : ஹன்சிகா!!

371

simbu hansika

சிம்புவும் ஹன்சிகாவும் காதல் முறிந்து பிரிந்துள்ளனர். ஆனால் இதுவரை காதல் முறிவுக்கான காரணத்தை இருவரும் தெரிவிக்கவில்லை. இதுபற்றி ஹன்சிகாவிடம் கேட்ட போது அவர் கூறியதாவது..

காதல் முறிவு பற்றி பேச எதுவும் இல்லை. இந்த விஷயத்தில் யாராவது ஒருவர் அமைதியாக இருக்க வேண்டும். நான் அமைதியாக இருக்கிறேன். நான் கௌரவமான குடும்பத்தில் இருந்து வந்து இருக்கிறேன். சிம்புவும் அப்படித்தான். நான் இரண்டு வார்த்தை பேசினால், சிம்புவும் இரண்டு வார்த்தை பேச வேண்டிவரும்.

இது என் மனதை புண்படுத்தும். சிம்பு மனதை நான் புண் படுத்தவிரும்பவில்லை. நான் அதில் இருந்து விலகி வந்து விட்டேன். இனிமேல் அந்த விஷயத்தை பற்றி பேசக் கூடாது. பத்து வருடம் கழித்து இந்த சர்ச்சை பற்றி கேட்டாலும் நான் அமைதியாகத்தான் இருப்பேன். ஒருத்தரை குற்றம் சொல்லி விரலை நீட்டினால் மற்ற மூன்று விரல்கள் நம்மை நோக்கித்தான் திரும்பி இருக்கும்.

காதல் முறிவுக்கு பிறகும் கூட படத்தில் சேர்ந்து தான் நடிக்கிறோம். நான் சிரிக்கும் போது என் மனதில் என்ன இருக்கிறது என்பது மற்றவர்களுக்கு தெரியாது. கோபம் வந்தாலும் சிரிப்பேன்.

தற்போது ஆறு படங்களில் நடித்து கொண்டு இருக்கிறேன். நான் எந்த நடிகைக்கும் போட்டி இல்லை. எனக்கு நானே தான் போட்டி, முதல் இடம், இரண்டாம் இடம் என்பதில் எல்லாம் எனக்கு நம்பிக்கை இல்லை. சிறப்பாக நடித்தால் நல்ல பெயர் கிடைக்கும்.

அரண்மனை படத்தில் வித்தியாசமான கரக்டர் அமைந்தது. இதில் மிகவும் கஷ்டப்பட்டு நடித்துள்ளேன். ஆர்யாவுடன் மீகாமன் படத்தில் ஜாலியான கரக்டரில் வருகிறேன். பார்ட்டிகளுக்கு போவது பிடிக்காது. நடிப்பது ஜிம்முக்கு போவது என்று இருக்கிறேன் என்று ஹன்சிகா கூறினார்.