யுவதியிடம் அறை வாங்கிய இளைஞன் வைத்தியசாலையில் அனுமதி!!

313


குருநாகல் வாரியபொலவில் யுவதி ஒருவரால் தாக்கப்பட்ட இளைஞர் நேற்று மாலை வாரியபொல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

காதில் ஏற்பட்டுள்ள பிரச்சினைக்காகவே அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். இந்தநிலையில் அவரை குருநாகல் வைத்தியசாலைக்கு மேலதிக சிசிக்சைக்காக மாற்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.



அண்மையில் யுவதி ஒருவர் இளைஞன் ஒருவரை வாரியபொல பஸ் நிலையத்தில் வைத்து தாக்கிய சம்பவம் முகநூலில் வைரஸ் போன்று பரப்பப்பட்டது.

தாம் அணிந்திருந்த ஆடை குறித்து, அந்த இளைஞன் கூறிய வார்த்தைக்காகவே யுவதி அவரை தாக்கியதாக தெரிவிக்கப்பட்டது.
எனினும் இளைஞர் எவ்வித எதிர்ப்புகளையும் அதன்போது வெளியிடவில்லை.



30 வயதான செல்வா என்ற ரொபர்ட் தாசன் சந்திரகுமார் என்ற இளைஞனே இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளானவர்.



V1 V2