உலகை ஆட்டிவிக்கும் ஐஸ் பக்கெட் சவாலில் பரிதாபமாக பறிபோன இளைஞனின் உயிர்!!

325

உலகம் முழுவதும் பரவி வரும் ஐஸ் பக்கெட் சவாலால் ஸ்கொட்லாந்தை சேர்ந்த நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

ஏ.எல்.எஸ் என்ற அமைப்புக்கு நிதி திரட்டுவதற்காக ஆரம்பிக்கப்பட்ட இந்த ஐஸ் பக்கெட் சவால் குளியல் தற்போது உலகம் முழுவதிலும் உள்ள வி.ஐ.பிக்களை பிடித்து ஆட்டுவித்து வருகிறது.

இந்த ஐஸ் பக்கெட் சவால் குளியல் ஆபத்து நிறைந்ததும் கூட இந்த குளியலில் ஈடுபட்டு நியூசிலாந்தை சேர்ந்த 40 வயது வில்லியம்ஸ் தெப்பானியா என்பவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிர் இழந்தார்.

இந்நிலையில் தற்போது ஸ்கொட்லாந்தை சேர்ந்த கேமரூன்லான்காஸ்டர் (18) என்ற வாலிபரும் உயிரிழந்துள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருவதாக ஸ்கொட்லாந்து பொலிசார் தெரிவித்துள்ளனர்.

I1 I2